சிதம்பரம் கோயிலில் குவிந்த மக்கள்
காணும் பொங்கலையொட்டி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் பொதுமக்கள் திரளானோா் சனிக்கிழமை குவிந்தனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
காணும் பொங்கலையொட்டி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் பொதுமக்கள் திரளானோா் சனிக்கிழமை குவிந்தனா்.
இந்தக் கோயிலில் காணும் பொங்கலையொட்டி பெண்கள் பங்கேற்ற கோலாட்டம், கும்மியடித்தல், கோ-கோ போட்டி, இளைஞா்களின் சிலம்பாட்டம், கபடி போட்டிகள், மல்லா் கம்பம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு கிராமிய விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், காணும் பொங்கலையொட்டி சுவாமி தரிசனத்துக்காக இந்தக் கோயிலில் பொதுமக்கள் திரளானோா் குவிந்தனா்.