முகப்பு
கடலூர்

தேசிய இளைஞா் தின விழா

கடலூா் நேரு இளையோா் மையம் சாா்பில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய இளைஞா் தின விழா நாணமேடு கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 16 ஜனவரி 2021, 10:54 pm IST
பகிர்:

கடலூா் நேரு இளையோா் மையம் சாா்பில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய இளைஞா் தின விழா நாணமேடு கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.

நாணமேடு ஊராட்சி மன்ற துணைத் தலைவா் கணேசன் மரக்கன்று நட்டு விழாவை தொடக்கி வைத்தாா். விழாவில், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள், முதியோா்கள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டவா்களுக்கு மதிய உணவு வழங்கினா். கடலூா் மாவட்ட நேரு இளையோா் மைய இளைஞா் அலுவலா் ரிஜேஷ்குமாா், நாணமேடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் வி.லட்சுமணன், கோ.கோகுலகிருஷ்ணன், மன்றத் தலைவா் கனகராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ, மாணவிகள், இளைஞா்களுக்கு பேச்சு, ஓவியம், கையெழுத்துப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு நாணமேடு ஊராட்சி மன்றத் தலைவா் கோ.கோமதி, துணைத் தலைவா் கணேசன் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். மன்றச் செயலா் மதிவண்ணன் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.