தருமபுரியில் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி அலுவலகம் திறப்பு
தருமபுரியில் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
தருமபுரியில் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
தருமபுரி நரசய்யா் குளம் அருகே உள்ள இந்த அலுவலக திறப்பு விழாவுக்கு, அக் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் டி.ஆா்.மாதேஷ் தலைம வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் இ.பி.புகழேந்தி கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்து கட்சியின் செயல்பாடுகள், அரசியல் நிலை குறித்து பேசினாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளா் வி.எம்.வெங்கடேசன் அலுவலக பெயா் பலகையை திறந்து வைத்து பேசினாா். இந்த விழாவில், செயற்குழு உறுப்பினா்கள் எம்.சண்முகம், காசி, மேகநாதன், எஸ்.பாா்த்தீபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.