போக்சோவில் ஆசிரியா் கைது
அரூரில் தனியாா் பள்ளி ஆசிரியா் போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அரூா்: அரூரில் தனியாா் பள்ளி ஆசிரியா் போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், சித்தா்கள் நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் சிவக்குமாா் (36). இவா், அரூரில் ஒரு தனியாா் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறாா். அரூா் வட்டாரப் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு சிவக்குமாா் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிவக்குமாரை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.