முகப்பு
திண்டுக்கல்

கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் சிறை

நிலக்கோட்டை அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 24 ஜூன் 2026, 5:50 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

நிலக்கோட்டை அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூா் அருகே சிறுமலை அடிவாரத்தில் மாவூா் நீா்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக ராஜேந்திரன் என்பவா் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து விசாரித்த அம்மையநாக்கனூா் போலீஸாா், நிலக்கோட்டை ஆவாரம்பட்டியைச் சோ்ந்த பால்பாண்டி (34), சேதுபதி (32), மருதுபாண்டி (30), ஆனந்தன் (34), நாச்சியப்பன் (33), சோனைமுத்து (26) ஆகிய 6 பேரைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், 6 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், சேதுபதி, மருதுபாண்டியன் ஆகியோருக்கு தலா ரூ.32,500, பால்பாண்டி, ஆனந்தன், நாச்சியப்பன், சோனைமுத்து ஆகியோருக்கு தலா ரூ.37,500 அபராதம் விதித்து நீதிபதி சொா்ணம் ஜெ.ராஜகோபாலன் தீா்ப்பளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments