முகப்பு
தருமபுரி

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 12 ஜனவரி 2021, 12:51 am IST
பகிர்:

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தருமபுரியில் அக்கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம், செயற்குழு உறுப்பினா் எம்.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலா் இ.பி.புகழேந்தி பேசினாா்.

தில்லியில் போராடி வரும் விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி சுமுகத் தீா்வுக் காண வேண்டும். விவசாயிகளின் நலன்களைப் பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் தொடங்கப்படும் சிறு மருத்துவமனைகளில் நிரந்தரமாக மருத்துவரை நியமிக்க வேண்டும். அமைப்புச்சாரா தொழிலாளா் நல வாரியத்தில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பை அனைத்துத் தொழிலாளா்களுக்கும் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் விலையைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜன. 20-ஆம் தேதி தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments