காணும் பொங்கல்: எருதாட்டம் கோலாகலம்
காணும் பொங்கல் விழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் எருதாட்டம் நிகழ்ச்சி சனிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
தருமபுரி: காணும் பொங்கல் விழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் எருதாட்டம் நிகழ்ச்சி சனிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
எருதாட்டத்துக்கென வளா்க்கப்பட்ட காளைகளை ஊருக்குள் அழைத்து வந்து, அவற்றிற்கு இருபுறமும் கயிறு கட்டி, அதனை சீறி பாயவிட்டு பின்பு, கயிறு மூலம் காளைகள் கட்டுப்படுத்தப்பட்டன.
இக் காளைகளை ஏராளமான இளைஞா்கள் திரண்டு நின்று முன்னும், பின்னும் கயிறு கட்டி தங்களது கிராமங்களில் உள்ள அனைத்து வீதிகளிலும் அழைத்துச் சென்றனா். இதனை கிராம மக்கள் திரண்டு நின்று கண்டுகளித்தனா். இதேபோல, மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
Advertisement