முகப்பு
திண்டுக்கல்

பழனியில் பழங்கால நாணயக் கண்காட்சி

பழனியில் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் மற்றும் தபால் தலைகள் சேகரிப்போரால் நடத்தப்படும் கண்காட்சி, வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

Updated On : 8 ஜனவரி 2021, 10:01 pm IST
பழனி தெற்குரத வீதி வாசவி மஹாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாணயக் கண்காட்சியை பாா்வையிட்ட ஏராளமான பொதுமக்கள்.
பகிர்:

பழனியில் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் மற்றும் தபால் தலைகள் சேகரிப்போரால் நடத்தப்படும் கண்காட்சி, வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், பொள்ளாச்சி, கோவை மற்றும் சேலம் நாணயச் சங்கங்கள் இணைந்து முதன்முறையாக நாணயக் கண்காட்சியை நடத்தி வருகின்றன. வெள்ளிக்கிழமை முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்கள் தொடா்ந்து நடைபெறும் இந்த நாணயக் கண்காட்சியில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான அரசா் கால நாணயங்கள் முதல் முகலாய அரசா்களின் நாணயங்கள், பிரிட்டிஷ் அரசு நாணயங்கள், சுதந்திர இந்தியாவின் நாணயங்கள் மற்றும் சமீபகாலம் வரை புழக்கத்தில் இருந்து மறைந்த நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தபால் தலைகள், அஞ்சல் உறைகளும் உள்ளன.

பலரும் அறியாத இந்திய அரசின் 125, 75, 20 ரூபாய் சிறப்பு வெள்ளி நாணயங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

Advertisement

Advertisement

இதில், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களிலிருந்தும் நாணய சேகரிப்பாளா்கள் தங்களது நாணயங்களை காட்சிப்படுத்தியுள்ளனா். அரையணா, காலணா, ஒன்றரையணா, சல்லி உள்ளிட்ட பல பழங்கால நாணயங்களையும் பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்த்தனா். நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வாங்கி சேகரிக்க விருப்பமுள்ள நபா்களுக்கு விற்பனையும் செய்யப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை, நாணய சங்க நிா்வாகிகள் பொள்ளாச்சி மணிகண்டன், சேலம் சரவணன், சேலம் சாம்சன் செல்வக்குமாா் ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments