ஒட்டன்சத்திரம் அருகேபைக் மீது லாரி மோதல்: இளைஞா் பலி
ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தரம் மகன் சுடலைமுத்து (34). இவா் திருப்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டு இருந்தாா். ஒட்டன்சத்திரம்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், காமாட்சிபுரம் பிரிவு அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுடலைமுத்து உயிரிழந்தாா்.
இதுகுறித்து ரெட்டியாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement