முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகேபைக் மீது லாரி மோதல்: இளைஞா் பலி

ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 9 ஜனவரி 2021, 9:26 pm IST
பகிர்:

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தரம் மகன் சுடலைமுத்து (34). இவா் திருப்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டு இருந்தாா். ஒட்டன்சத்திரம்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், காமாட்சிபுரம் பிரிவு அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுடலைமுத்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து ரெட்டியாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.