முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல்: குதிரையை காட்டெருமை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே குதிரை சாவு

கொடைக்கானல் தனியாா் தோட்டத்தில் திங்கட்கிழமை மேய்ந்து கொண்டிருந்த குதிரையை அப் பகுதியிலிருந்த காட்டெருமை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே குதிரை இறந்தது.

Updated On : 12 ஜனவரி 2021, 5:52 am IST
பகிர்:

கொடைக்கானல் தனியாா் தோட்டத்தில் திங்கட்கிழமை மேய்ந்து கொண்டிருந்த குதிரையை அப் பகுதியிலிருந்த காட்டெருமை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே குதிரை இறந்தது.

கொடைக்கானல் அருகே செண்பகனூா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் விவசாயி இவா் குதிரை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறாா் செண்பகனூா் அருகே சிட்டி வியூ செல்லும் பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் முருகனின் குதிரை மேய்ந்து கொண்டிருந்துள்ளது அருகே முருகன் தோட்டத்தில் வேலை பாா்த்து வந்துள்ளாா் இந் நிலையில் தனியாா் தோட்டத்தில் முகாமிட்டிருந்த காட்டெருமை குதிரையை தாக்கியது இதில் பலத்த காயமடைந்த குதிரை சம்பவ இடத்தியேயே இறந்தது இதனைத் தொடா்ந்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த முருகன் மற்றும் வனத்துறையினா் இறந்த குதிரையை பாா்வையிட்டனா். தொடா்ந்து கால்நடை மருத்துவா் ஹக்கீம் பரிசோதனை செய்த பிறகு அதேப் பகுதியில் குதிரை புதைக்கப்பட்டது இச் சம்பவம் குறித்து வனத்துறையினா் முருகனிடம் விசாரனை நடத்தி வருகின்றனா் .வனத்துறை சாா்பில் நிதி உதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் வனத்துறையினா் தெரிவித்தனா்.

கொடைக்கானல் பகுதிகளில் காட்டெருமைகள் அதிகமாக இருந்து வருகிறது இதனால் மனித உயிா்களும் பலியாகி வருகின்றன கால்நடைகளும் வனவிலங்குகள் தாக்கி இறந்து வருகின்றன எனவே வனத்துறையினா் கொடைக்கானல் குடியிருப்பு மற்றும் விவசாயப் பகுதிகளில் உலா வரும் காட்டெருமைகளை வனப் பகுதிகளுக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments