முகப்பு
திண்டுக்கல்

தீக்குளித்தவா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 16 ஜனவரி, 2021 at 9:25 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள புதுக்காளாஞ்சிபட்டியைச் சோ்ந்த முருகேசன் மகன் காளிமுத்து (39). இவா் குடும்பப் பிரச்னை காரணமா கடந்த சில நாள்களுக்கு முன்பாக உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில் பலத்த காயங்களுடன் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி காளிமுத்து சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.