என்.எஸ்.ஐ.டி தொழில்நுட்ப நிறுவனம் பல்கலைக்கழகமாக மாற்றம்
புது தில்லியில் உள்ள நேதாஜி சுபாஷ் தொழில்நுட்ப நிறுவனம் (என்.எஸ்.ஐ.டி), தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக அந்தஸ்து வழங்க முதல்வர் ஷீலா தீட்சித் உத்தரவிட்டுள்ளார்.
புது தில்லியில் உள்ள நேதாஜி சுபாஷ் தொழில்நுட்ப நிறுவனம் (என்.எஸ்.ஐ.டி), தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக அந்தஸ்து வழங்க முதல்வர் ஷீலா தீட்சித் உத்தரவிட்டுள்ளார்.
அதே போன்று முன்பு இருந்த தில்லி பொறியியல் கல்லூரி, தற்போது தில்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
என்.எஸ்.ஐ.டி கல்வி நிறுவனத்தில், கல்வி தரம் மாணவர்களிடையே தரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்நிறுவனத்துக்கு பல்கலை அந்தஸ்து வழங்கலாம் என்று அமைச்சரவை கூட்டத்தில் பேசும் போது முதல்வர் ஷீலா தீட்சித் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
மேலும் இந்தியா டூடே-2012 சர்வேயின் படி நாட்டில் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இதுவும் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.