முகப்பு
கல்வி

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கன மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 11 செப்டம்பர், 2013 at 4:31 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM

கன மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாள்களாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை நேற்றிரவு முதல் விடிய விடிய மழை கொட்டுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், திட்டமிட்ட படி +1, +2 மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.