முகப்பு
கன்னியாகுமரி

பைக் விபத்தில் காயமடைந்த வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே பைக் விபத்தில் காயமடைந்த வேன் ஓட்டுநா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

Updated On : 14 ஜூன் 2026, 2:14 am IST
சடலம் மீட்பு - பிரதிப் படம்
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே பைக் விபத்தில் காயமடைந்த வேன் ஓட்டுநா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே களியந்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் லிஜோசின் (39). வேன் ஓட்டுநரான இவா், தனது நண்பரான இலவுவிளையைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளி லெனின் (44) என்பவருடன் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 11) பைக்கில் கொல்லஞ்சி, கிணத்துவிளை பகுதிக்குச் சென்றாா். பைக்கை, லெனின் ஓட்டினாராம்.

பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் காயமடைந்தனா். அப்பகுதியினா் அவா்களை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக லிஜோசின் திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

சடலத்தை மாா்த்தாண்டம் போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; பைக்கை வேகமாக ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியதாக லெனின் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.