பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏன்?
தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் பற்றி..
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் அவதியடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டு மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஆகலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்வு முடிவுகளை வெளியிட மாநில அரசின் ஒப்புதல் தேவை என்பதால், புதிய அரசு ஆட்சி அமைந்தபிறகு தேர்வு முடிவுகள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மாநிலம் முழுவதும்12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2-ஆம் தேதி தொடங்கின. மாநிலம் முழுவதும் தனித்தேர்வர்களுடன் சேர்த்து, 8 லட்ச மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர்.
மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த ஏப்ரல் 6 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவ - மாணவிகள் இடையே நிலவி வந்ததையடுத்து, தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.