10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? எப்படி அறிவது?
தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தில் படித்து தேர்வெழுதியிருக்கும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது?
தமிழ்நாட்டில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் படித்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 20-ம் தேதி) வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன், பள்ளிகள் திறப்பு மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் பள்ளிக்கல்வி துறை அமைச்சகர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நடைபெற்று முடிந்த 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 20-ம் தேதி) வெளியிடப்படும்.
Advertisement
வரும் ஜூன் 1-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். பள்ளிகள் திறக்கப்படும் அன்று, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சீருடைகள் புத்தகங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்,