பினராயி விஜயன் ராஜிநாமா!
கேரள முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜிநாமா செய்தது குறித்து...
கேரளத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணியின் தோல்வியைத் தொடர்ந்து, கேரள முதலமைச்சர் பதவியில் இருந்த பினராயி விஜயன் இன்று (மே.4) ராஜிநாமா செய்தார்.
ஆளுநர் ஆா்.வி.ஆா்லேகா், பினராயி விஜயனின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டதோடு, மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை விஜயனைப் பொறுப்பு முதல்வராகத் தொடருமாறு கேட்டுக்கொண்டதாக ராஜ்பவன் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு முறை தொடர்ச்சியாக மாநிலத்தில் ஆட்சி வகித்து வந்த விஜயன், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, வெற்றிப்பாதையில் உள்ளதைத் தொடர்ந்து தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்தார்.
Advertisement
summary