முகப்பு
தமிழ்நாடு

தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி

தொகுதி மறுவரையில் தமிழ்நாட்டில் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Updated On : 17 ஏப்ரல் 2026, 5:40 pm IST
எடப்பாடி பழனிசாமி.
பகிர்:

தொகுதி மறுவரையில் தமிழ்நாட்டில் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தமிழ்நாட்டில் மூலை, முடுக்கெல்லாம் கஞ்சா அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது. திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்த 90 நாள்களில் கஞ்சா அறவே ஒழிக்கப்படும்.

அதிமுக மக்களுக்கான கட்சி, திமுக குடும்பத்திற்கான கட்சி. சட்டம் - ஒழங்கை அதிமுக நிலைநாட்டும், பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தொகுதி மறுவரையில் தமிழ்நாட்டில் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது. தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வராது என பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement

ஸ்டாலின் அணிந்த கருப்பு சட்டைக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. ஸ்டாலின் நலமோடு இருக்க வேண்டும். அதிமுக ஆட்சி அமைப்பதை அவர் பார்க்க வேண்டும். ஜெயலலிதா மறைந்த பிறகும், சேலம் மாவட்டத்தில் 11இல் 10 தொகுதிகளை வென்றோம். தமிழ்நாட்டுக்கும், தில்லிக்குமான தேர்தல் இல்லை.

நாம் வெல்லாவிட்டால் தமிழ்நாடு சர்வாதிகாரமாக மாறும். திமுக ஒரு கட்சி கிடையாது, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதன் சேர்மன் ஸ்டாலின். இவ்வாறு குறிப்பிட்டார்.

summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has stated that the number of constituencies in Tamil Nadu will not decrease during the delimitation process.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.