பெரம்பூரில் ‘விசில்’ கோலமிட்டு வாக்கு சேகரித்த விஜய்!
பெரம்பூரில் விசில் கோலமிட்டு வாக்கு சேகரித்த விஜய்யைப் பற்றி...
பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், விசில் கோலமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கான பணிகள் சூடிபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மிகத் தீவிரமாகத் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, புதுவரவான தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் முழுவீச்சில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர் போட்டியிடும் சென்னை பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு ஒரு வீட்டு வாசலில் தவெகவின் சின்னமாக ‘விசில்’ சின்னத்தைக் கோலமாகப் போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் விஜய்.