தேஜஸ்வி யாதவை வரவேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள தமிழ்நாடு வந்துள்ள ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள தமிழ்நாடு வந்துள்ள ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், வணக்கம் சகோதரர் தேஜஸ்வி யாதவ், தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது.
தந்தை பெரியார் மற்றும் கர்ப்பூரி தாக்குர் ஆகியோரின் வழிகாட்டுதலில், சமூக நீதிக்காக இன்று மாலை மேட்டுப்பாளையத்தில் நாம் ஒன்றிணைகிறோம்.
Advertisement
வெறுப்பின் மூலம் வளரும் பிரிவினைவாத சக்திகளை நாம் ஒன்றிணைந்து தோற்கடித்து, நீதியான மற்றும் ஒருமைப்பாடான இந்தியாவை உருவாக்குவோம்.
நீதிக்காக ஒன்றிணைவோம். வெற்றிக்காகக் கட்டியமைப்போம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இன்று மாலை மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் கூட்டத்தில் இருவரும் இணைந்து பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.