தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாது என்பது பாஜகவுக்குத் தெரியும்: தேஜஸ்வி யாதவ்
தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாது என்பது பாஜகவுக்குத் தெரியும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாது என்பது பாஜகவுக்குத் தெரியும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பிகார் மாநில எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயல் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கோவை விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்தும், இட ஒதுக்கீடு மசோதா குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் பேசுவதை எல்லாம் கேட்காதீர்கள்.
அவர்கள் மிகப்பெரிய பொய்யர்கள். அவர்களைப் பற்றி பேச விரும்பவில்லை. மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதனை 2034-ல் தான் அமல்படுத்தப்போவதாக மத்திய அரசு கூறியுள்ளது. தொகுதி மறுவரையறை என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு விவகாரம். எங்களுக்கு முதலில் சாதி வாரி கணக்கெடுப்பு தேவை.
Advertisement
புதிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை அறிமுகப்படுத்தப்பட்டால் அது சிறப்பாக இருக்கும். ஆனால் 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அது இருக்கக்கூடாது. இந்த மசோதா நிறைவேறாது என்பது பாஜகவுக்குத் தெரியும். அவர்கள் பெண்களுக்கு ஆதரவானவர்கள் என்றும், நாங்கள் அதற்கு எதிரானவர்கள் என்றும் காட்டுவதற்காகவே இந்த மசோதாவைக் கொண்டு வந்தனர்.
ஆனால் அது தவறானது. இவ்வாறு குறிப்பிட்டார்.