வீல்சேர் வசதி இல்லாததால் வாக்களிக்க வந்த முதியவர்கள் அவதி!
வாக்களிக்க வந்த முதியவர்களுக்கு வீலசேர் வசதி இல்லாததால் அவதியடைந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை தொடங்கிய நடைபெற்றுவரும் நிலையில், வாக்களிக்க வந்த முதியவர்களுக்கு வீலசேர் வசதி இல்லாததால் அவதியடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டப்பேரவை தொகுதிகளிலும் காலை முதல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதியவர்கள் வாக்களிக்க ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வீல் சேர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே வானராங்குடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வீல் சேர் வசதி இல்லாததால் வாக்களிக்க வந்த 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Advertisement
சுட்டெரிக்கும் வெயிலில் நடக்க முடியாமல் வந்த அவர்களைத் துணை இராணுவத்தினர் மெதுவாக அழைத்து வந்து வாக்குப்பதிவு செய்ய வைத்தனர். மீண்டும் அவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து சென்றனர். உடனடியாக முதியவர்கள் வாக்களிக்க வசதியாக வீல்சேர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.