கூட்டணிக் கட்சிகளுக்காக தேர்தல் பணியாற்றாத விசிகவினர்: தொல் திருமாவளவன்
கூட்டணிக் கட்சிகளுக்காக விசிகவினர் தேர்தல் பணியாற்றவில்லை என தொல் திருமாவளவன் தெரிவித்தது குறித்து...
விசிகவைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் சிலர் கூட்டணிக் கட்சிகளுக்காக தேர்தல் பணியாற்றவில்லை என அந்தக் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் 85 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், வரும் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. ஆகையால், தமிழக அரசியல் களமே மே 4 ஆம் தேதியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் விடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் பேசியிருப்பதாவது:
Advertisement
Advertisement
“நம்முடைய கட்சியின் சார்பில் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் பணிக்குழு நியமனம் செய்யப்பட்டன. ஆங்காங்கே தோழர்கள் தொகுதி வாரியாக கட்டுக்கோப்பாக இருந்து சிறப்பாகப் பணியாற்றி இருக்கின்றனர். ஆனால், ஒரு சில தொகுதிகளில் இவ்வாறு நடக்கவில்லை.
ஒரு சில தொகுதிகளில், குறிப்பாக நாம் போட்டியிடாத பிற தொகுதிகளில் நம்முடைய தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு தேர்தல் பணி ஆற்றியதில் தோழர்கள் சிலர் ஒற்றுமையாக இருந்து பணியாற்றவில்லை என்கிற தகவல்கள் வந்துள்ளன. இதுகுறித்து தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.
VCK leader Thol. Thirumavalavan has stated that some functionaries belonging to the party did not campaign for their alliance partners during the elections.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.