பதவியேற்பு விழாவில் பங்கேற்றோர்! முதல் வரிசையில் ’லாட்டரி’ மார்ட்டின்!
விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ’லாட்டரி’ மார்ட்டின் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.
விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ’லாட்டரி’ மார்ட்டின் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.
தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். விஜய்க்கு முதல்வராக பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டிகே பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அவர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் ஆளுநர் செய்துவைத்தார்.
Advertisement
Advertisement
பதவியேற்பு நிகழ்ச்சயில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், நடிகை திரிஷா, ’லாட்டரி’ மார்ட்டின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதில், ’லாட்டரி’ மார்ட்டினுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதுசமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளன. ’லாட்டரி’ மார்ட்டின் மருமகனான ஆதவ் அர்ஜுனா தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Lottery' Martin was seated in the front row at Vijay's swearing-in ceremony.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.