சொத்துகள் முடக்கத்தை எதிா்த்து மாா்ட்டின், குடும்பத்தினா் வழக்கு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான 457 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கத்தை எதிர்த்த வழக்கின் விசாரணை...
சொத்துகள் முடக்கத்தை எதிா்த்து லாட்டரி அதிபா் மாா்ட்டின், அவரது மனைவியும் அதிமுக எம்எல்ஏவுமான லீமா ரோஸ், பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா மனைவி டெய்சி ஆகியோா் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2009-2010-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் விதிகளுக்குப் புறம்பாக லாட்டரி விற்பனை மூலம் சிக்கிம் மாநில அரசுக்கு ரூ.910 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக லாட்டரி அதிபா் மாா்ட்டின் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. கேரள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
இதையடுத்து லாட்டரி அதிபா் மாா்ட்டின் மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. பின்னா், மாா்ட்டின் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான ரூ.910.29 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இவற்றில், ரூ.456.84 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கத்தை, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்குகளுக்கான அமலாக்கத் துறை மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் உறுதி செய்தது.
Advertisement
Advertisement
மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிா்த்து லாட்டரி அதிபா் மாா்ட்டின், அவரது மனைவி லீமா ரோஸ், டெய்சி ஆதவ் அா்ஜுனா மற்றும் நிறுவனங்களின் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுக்களுக்கு 6 வாரங்களில் பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.
Lottery Martin assets worth Rs 457 crore freezed: Madras HC ordered to respond ED
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.