பேரவைப் பதவிக் காலம் நாளையுடன் நிறைவு! அடுத்து ஆளுநர் செய்யப்போவது என்ன?
பேரவைப் பதவிக் காலம் நாளையுடன் நிறைவடையும் நிலையில், அடுத்து ஆளுநர் செய்யப்போவது என்ன என்பது பற்றி..
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 10ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், புதிய அரசு பதவியேற்காவிட்டால் என்னவாகும்? அடுத்து ஆளுநர் செய்யப்போவது என்ன? என்பது குறித்த அடுக்கடுக்கான கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றன.
முதற்கட்ட தகவல்கள், 2026ஆம் ஆண்டு மே 10ஆம் தேதிக்குள் தவெக தலைவர் விஜய், தன்னுடைய கட்சிக்கு இருக்கும் பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், தொங்கு பேரவையில் ஒரு கடுமையான நெருக்கடியை சந்திக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.
மே 10ஆம் தேதியுடன், நடப்பு சட்டப்பேரவையின் ஆயுள் நிறைவடையும் நிலையில், ஆளுநர் முன்பு மிகக் குறைந்த வாய்ப்புகளே இருக்கும். தவெக-வை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் அல்லது அடுத்த இடத்தில் இருக்கும் கட்சியை அழைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கலாம் அல்லது புதிதாக தேர்தல் நடத்த பரிந்துரை செய்யலாம்.
Advertisement