மேற்கு வங்கம்: காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன்!
பஹராம்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரிக்கு ஆதரவாக முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன் வாக்கு சேகரித்தார்.
பஹராம்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரிக்கு ஆதரவாக முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன் வாக்கு சேகரித்தார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு ஏப்.23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் பஹராம்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஆதிர் ரஞ்சன் சௌத்ரி களமிறக்கப்பட்டுள்ளார்.
ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சௌத்ரி, மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு மாநிலத் தேர்தல் அரசியலுக்குத் திரும்பியுள்ளார். இந்த நிலையில் ஆதிர் ரஞ்சன் சௌத்ரிக்கு ஆதரவாக முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார்.
Advertisement
அதில், சௌத்ரியின் பரந்த அரசியல் அனுபவத்தையும் இப்பகுதியுடனான அவரது தொடர்பையும் அசாருதீன் நினைவு கூர்ந்தார். சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு, பால்கனிகளில் நின்றுகொண்டு முகமது அசாருதீனைப் பார்த்து கைகளை அசைத்தனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் பஹராம்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஆதிர் ரஞ்சன் சௌத்ரி முன்னாள் கிரிக்கெட் வீரரான திரிணமூல் காங்கிரஸின் யூசுப் பதானிடம் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.