இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷனில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷனில் (ஐஆர்எப்சி) காலியாக உள்ள இந்தி மொழிப்பெயர்ப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷனில் (ஐஆர்எப்சி) காலியாக உள்ள இந்தி மொழிப்பெயர்ப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபப்டுகின்றன.
விளம்பர எண். 04/2021 தேதி: 28.12.2021
நிறுவனம்: இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷன்
Advertisement
Advertisement
மொத்த காலியிடங்கள்: 04
பணி : Hindi Translator (NE5)
காலியிடங்கள்: 01
தகுதி : இந்தி, ஆங்கிலம் பாடங்களை முதன்மையாக கொண்டு முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி : Assistant (Finance) (NE5)
காலியிடங்கள்: 02
பணி : Assistant Administration(NE5)
காலியிடங்கள்: 01
இதற்கு விண்ணப்பிக்கலாம் | தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
தகுதிகள்: மேற்கண்ட 2 பணியிடங்களுக்கு 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிஏ, சிஎம்ஏ, எம்பிஏ(எச்ஆர்) முடித்திருந்தால் விரும்பத்தக்கது.
பணி அனுபவம்: குறைந்தபட்சம் 2 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : https://irfc.nic.in/uploads/Adv.%20Recruitment%20NE%202021.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து info@irfc.nic.in என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.02.2022
மேலும் விபரங்கள் அறிய http://irfc.nic.in அல்லது https://irfc.nic.in/uploads/Adv.%20Recruitment%20NE%202021.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரயில்வே கட்டுமான ஆணையத்தில் வேலை வேண்டுமா?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.