ரயில்வேயில் வேலை வேண்டுமா..? விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்!
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செய்லபட்டு வரும் மேற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செய்லபட்டு வரும் மேற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பிக்க வேண்டும்.
விளம்பர எண். RRC/WR/02/2022
பணி: Clerk-cum Typist(Sports Quota)
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 21
சம்பளம்: நிலை-2 மாதம் ரூ.19,000 - 63,200, நிலை-4 மாதம் ரூ.25,500 - 81,100
வயதுவரம்பு: 01.01.2023 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வங்கியில் வேலை வேண்டுமா..? எஸ்பிஐ வங்கியில் 1,673 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணங்கள் வரவேற்பு!
விளையாட்டுத் தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுகள் ஏதாவதொன்றில் சர்வதேச போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள், தெற்காசிய போட்டிகள் போன்ற ஏதாவதொன்றில் பங்கு பெற்று குறைந்தபட்சம் மூன்றாவது இடத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
விளையாட்டு பிரிவுகள்: Wrestling(Men Freestyle), Shooting, Kabadi, Hockey, Weight Lifting, Power Lifting, Gymnastic, Cricket, Ball Badminton.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள். சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டுத் தகுதிகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.78 ஆயிரம் சம்பவளத்தில் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை!
01.04.2022 முதல் 30.08.2022 வரையிலான காலக்கட்டத்தில் பெற்ற விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். சம்மந்தப்பட்ட விளையாட்டில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrc-wr.com அல்லது https://www.rrc-wr.com/rrwc/Files/195.pdfஎன்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.10.2022
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.