தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி
மத்திய அரசின் உயர்கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பான தொழிற்பயிற்சி வாரியத்தில் வேலை.
மத்திய அரசின் உயர்கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பான தொழிற்பயிற்சி வாரியத்தில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Administrative Accounts Officer
காலியிடம்: 1
Advertisement
Advertisement
வயது வரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100
தகுதி: ஏதாவதொரு துறையில் இரண்டாம் வகுப்பில் இளங்நிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் CA,ICWA,SAS தேர்ச்சியும், 5 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Director of Training
காலியிடம்: 1
வயது வரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100
தகுதி: பொறியியல், டெக்னாலஜி துறையில் ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களிலும் சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, Board of Apprenticeship Training (SR), Taramani, Chennai
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 18.8.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Board of Apprenticeship Training (SR) herein after referred as “BOAT(SR)” is an autonomous organization, under the Ministry of Education, Department of Higher Education, Govt. of India.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.