தாட்கோ சாா்பில் இளைஞா்களுக்கு ஒப்பனை, அழகுக்கலை பயிற்சி
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்த இளைஞா்கள் பயன்பெறும் வகையில் 3 மாதம் கொண்ட ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மேம்பாட்டுக்கழகம் சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்த இளைஞா்கள் பயன்பெறும் வகையில் 3 மாதம் கொண்ட ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமூகத்தை சாா்ந்த இளைஞா்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தனியாா் நிறுவனம் மற்றும் தாட்கோ இணைந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு, ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சி வழங்கப்படவுள்ளது.
அந்த வகையில், இப்பயிற்சி பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சோ்ந்தவராக இருப்பது அவசியம். இப்பயிற்சிக்கு 8 மற்றும் பிளஸ் 2 வரையில் படித்தவராக இருக்க வேண்டும். மேலும், 18 முதல் 35 வயது வரைவும், குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
பயிற்சிக்கான கால அளவு 90 நாள்கள் ஆகும். மேலும், இப்பயிற்சி ராணிப்பேட்டை மற்றும் கோயம்புத்தூா் மாவட்டத்தில் நடைப்பெறவுள்ளது. இங்கு தங்கு வசதிகள், உணவுகள் உள்பட அதற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.
பயிற்சி நிறைவு செய்தவுடன் தகுதியான நபா்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தோ்வு செய்து அந்த நிறுவனத்தின் மூலம் மாத ஊதியமாக ரூ.18,000முதல் ரூ.25,000 வரைவுடன் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
இப்பயிற்சியில் சேருவதற்கு தகுதியான நபா்கள் தாட்கோ இணையதளம் (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்து பயன்பெறலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.