விண்ணப்பித்துவிட்டீர்களா..? ராஜீவ்காந்தி தேசிய விமான போக்குவரத்து பல்கலையில் வேலை!
இந்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் பர்சட்கன்ச், அமேதி, உத்தரப்பிரதேசத்தில் செயல்பட்டு வரும் ராஜீவ்காந்தி தேசிய விமான போக்குவரத்து பல்கலைக்கழகத்தில் நேரடி ஆள்சேர்ப்பு
இந்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் பர்சட்கன்ச், அமேதி, உத்தரப்பிரதேசத்தில் செயல்பட்டு வரும் ராஜீவ்காந்தி தேசிய விமான போக்குவரத்து பல்கலைக்கழகத்தில் நேரடி ஆள்சேர்ப்பு, டெபுடேசன் அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நிதி அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: RGNAU/5156/03/ADMIN-Part(5)
பணி: நிதி அதிகாரி(Finance Officer)
Advertisement
சம்பளம்: மாதம் ரூ.1,44,200
தகுதி: நிதியியல் துறையில் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்: 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினரை தவிர மற்ற அனைத்து பிரிவினரும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rgnau.ac.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு, விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “Acting Registrar cum Finance Officer, Rajiv Gandhi National Aviation University (RGNAU), Fursatganj, Amethi, Uttar Pradesh-229302”
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 9.3.2023
மேலும், விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Related Article
இந்திய வனத்துறையில் வேலை வேண்டுமா? யுபிஎஸ்சி அறிவிப்பு!
தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா? பிப்.16-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
விண்ணப்பித்துவிட்டீர்களா? வேளாண் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி!
ஆண்டுக்கு ரூ.13.10 லட்சம் சம்பளத்தில் சௌத் இந்தியன் வங்கியில் வேலை வேண்டுமா?
சுகாதாரத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: பிப்.23க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!