முகப்பு
அரசுப் பணிகள்

தேசிய தகவல் மையத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

தேசிய தகவல் மையத்தில் (என்ஐசி) காலியாக உள்ள விஞ்ஞானி, பொறியாளர்,தொழில்நுட்ப உதவியாளர் என குரூப் ஏ மற்றும் பி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 4 மார்ச் 2023, 1:21 pm IST
பகிர்:

தேசிய தகவல் மையத்தில் (என்ஐசி) காலியாக உள்ள விஞ்ஞானி, பொறியாளர்,தொழில்நுட்ப உதவியாளர் என குரூப் ஏ மற்றும் பி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Scientist-‘B’
காலியிடங்கள்: 71

Advertisement

Advertisement

பணி: Scientific Officer/Engineer – SB
காலியிடங்கள்: 196

பணி: Scientific/Technical Assistant - ‘A’
காலியிடங்கள்: 331

தகுதி: பொறியியல் துறையில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள், எம்.எஸ்சி, எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 4.4.2023 தேதியின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதிற்குள் இருக்குள்ளும், மற்ற பிரிவினர் 33 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகைகள் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.800 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.calicut.nielit.in/nic என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments