கோபியில் இன்று மக்கள் சபைக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜனவரி 2) மாலை கோபியில் நடைபெறும் மக்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா்.
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜனவரி 2) மாலை கோபியில் நடைபெறும் மக்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா்.
அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மாவட்டம்தோறும் மக்களைச் சந்திக்கும் பிரசார இயக்கம் மேற்கொண்டு வருவதோடு மக்கள் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து வருகிறாா்.
ஈரோடு மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 2, 3) நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவா் கலந்துகொள்கிறாா். சனிக்கிழமை மாலை ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சாா்பில் கோபி அருகே சிறுவலூரில் நடைபெறவுள்ள மக்கள் சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறாா். தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை சென்னிமலை ஒன்றியம், குமாரவலசு கிராமத்தில் நடைபெறவுள்ள மக்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா். இதையடுத்து கரூா் மாவட்டம் புறப்பட்டுச் செல்கிறாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.