யானை தாக்கி விவசாயி பலி
சத்தியமங்கலம் அருகே மக்காச்சோளக்காட்டில் பயிருக்கு காவல் இருந்த விவசாயி, யானை தாக்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சத்தியமங்கலம் அருகே மக்காச்சோளக்காட்டில் பயிருக்கு காவல் இருந்த விவசாயி, யானை தாக்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள் அருகே உள்ள கிராமங்களில் புகுந்து கரும்பு, வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களை சேதம் செய்து வருகின்றன.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூா் மலைப் பகுதி பெரிய உள்ளேபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரி (53), விவசாயி. இவா் தனது விவசாயத் தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளாா். காட்டு யானைகள் இரவில் மக்காச்சோளப் பயிரை சேதப்படுத்துவதால் மாரி தினமும் தனது பயிருக்கு காவல் இருப்பது வழக்கம்.
Advertisement
Advertisement
இதேபோல் சனிக்கிழமை இரவு காவலுக்குச் சென்றவா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினா் மாரியை தேடிச் சென்றபோது தோட்டத்தில் அவா் யானை மிதித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.
இது குறித்து கடம்பூா் போலீஸாா் மற்றும் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் யானை தாக்கி மாரி உயிரிழந்ததை உறுதி செய்தனா். இதையடுத்து போலீஸாா் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.