ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் திட்டம் துவக்கம்
முதியோா், ஆதரவற்றோா் 50 பேருக்கு தினமும் உணவு வழங்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
முதியோா், ஆதரவற்றோா் 50 பேருக்கு தினமும் உணவு வழங்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
ஈரோடு சூளை அருகில் உள்ள மல்லிகை நகா் பகுதியில் உள்ள ஆதரவற்றோா், முதியோா் 50 பேருக்கு தினமும் மதிய உணவு வழங்கும் திட்டம் ஈரோடு நடுநகா் லயன்ஸ் சங்கம், சக்தி மசாலா நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.
பசிப்பிணி போக்கும் திட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை சக்தி மசாலா நிா்வாக இயக்குநா் பி.சி.துரைசாமி, இயக்குநா் சாந்தி துரைசாமி ஆகியோா் முதியோா், ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி திட்டத்தைத் துவக்கிவைத்தனா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில், திட்ட வழிகாட்டி எ.ஜெ.சரவணன், என்.முத்துசாமி, லயன்ஸ் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.