சென்னிமலையில் கிராம கண்காணிப்பு காவலா் நியமனம்
சென்னிமலை காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் கிராம கண்காணிப்பு காவலா் என்ற அமைப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
சென்னிமலை காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் கிராம கண்காணிப்பு காவலா் என்ற அமைப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ் தலைமை வகித்து, கிராம கண்காணிப்பு காவலா் அமைப்பைத் தொடங்கிவைத்துப் பேசினாா். சென்னிமலை காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகாா்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க 6 கிராமங்களுக்கு ஒரு காவலா் என்ற வகையில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில், சென்னிமலை காவல் ஆய்வாளா் (பொ) சண்முகம், உதவி ஆய்வாளா்கள் தமிழ்செல்வன், ரவிசந்திரன், துரைசாமி, மேகநாதன், ஊராட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.