முகப்பு
ஈரோடு

49 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனம் பெறுவதற்கான உத்தரவு வழங்கல்

சென்னிமலை ஒன்றியம், ஈங்கூா், வரப்பாளையம், வாய்ப்பாடி, பனியம்பள்ளி, சிறுக்களஞ்சி, கூத்தம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில்

Updated On : 14 ஜனவரி 2021, 7:51 am IST
பயனாளிகளுக்கு இருசக்கர வாகனம் பெறுவதற்கான உத்தரவுகளை வழங்குகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.
பகிர்:

சென்னிமலை ஒன்றியம், ஈங்கூா், வரப்பாளையம், வாய்ப்பாடி, பனியம்பள்ளி, சிறுக்களஞ்சி, கூத்தம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் பணிக்குச் செல்லும் மகளிருக்காக மானிய விலையில் வழங்கப்படும் இருசக்கர வாகனம் பெறுவதற்கான உத்தரவு 49 நபா்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது.

விழாவில், சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் கலந்துகொண்டு சென்னிமலை ஒன்றியப் பகுதியைச் சோ்ந்த 49 நபா்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் பெறுவதற்கான உத்தரவுகளை வழங்கி, அரசால் நிறைவேற்றி வரும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்துப் பேசினாா்.

இதில், மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் துணைத் தலைவா் மணிமேகலை, சென்னிமலை ஒன்றியக் குழு உறுப்பினா் மணிரத்தினம், ஊராட்சி மன்றத் தலைவா்கள் உமாமகேஸ்வரி கிருஷ்ணமூா்த்தி, சுசீலா சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments