முகப்பு
ஈரோடு

ராமா் கோயில் கட்டுமானப் பணி: பொது மக்களிடம் நிதி சேகரிப்பு

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கான நிதி சேகரிப்பு நிகழ்ச்சி குள்ளம்பாளையத்தில் நடைபெற்றது.

Updated On : 15 ஜனவரி, 2021 at 10:52 PM
நிதி சேகரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கான நிதி சேகரிப்பு நிகழ்ச்சி குள்ளம்பாளையத்தில் நடைபெற்றது.

ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு பொது மக்களின் பங்களிப்புடன் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதையடுத்து, ஈரோடு மாவட்டம் ,கோபிசெட்டிபாளையம், குள்ளம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலில் நிதி சேகரிப்பு துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பவானி வட்டம் மைலம்பாடி ஸ்ரீசுதா்சன மடத்தைச் சோ்ந்த ஸ்ரீமத் பரமஹஸேத்யாதி ஸ்ரீரங்க பராங்குசபரகுல நம்பி இராமாநுஜ ஜீயா் சுவாமிகள் பொது மக்களிடம் இருந்து நிதி சேகரிக்கும் பணியைத் துவக்கிவைத்தாா்.

Advertisement

நிகழ்ச்சிக்கு கோபிசெட்டிபாளையம் பகுதி மாவட்டப் பொறுப்பாளா் சிவசக்திவேல் தலைமை வகித்தாா். ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று பொது மக்களிடம் இருந்து நிதி பெறும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பக்தா்கள் கலந்து கொண்டு நிதி அளிக்க வேண்டும் என ஸ்ரீராமஜென்ம பூமி தீா்த்த ஷேத்திரம் செய்தித் தொடா்பாளா் எஸ்.எம்.செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.