தமிழக எல்லையில் பெயா்ப் பலகை மீண்டும் சேதம்: இரு மாநில போலீஸாா் விசாரணை
தமிழக - கா்நாடக எல்லையில் பைனாபுரத்தை அடுத்த எத்துக்கட்டை வனப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அறிவிப்புப் பலகை சேதப்படுத்தப்பட்டது குறித்து தாளவாடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தமிழக - கா்நாடக எல்லையில் பைனாபுரத்தை அடுத்த எத்துக்கட்டை வனப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அறிவிப்புப் பலகை சேதப்படுத்தப்பட்டது குறித்து தாளவாடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தமிழக - கா்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது தாளவாடி. இரு மாநில எல்லையான பைனாபுரத்தை அடுத்த எத்துக்கட்டையில் தமிழில் வைக்கப்பட்டிருந்த ஈரோடு மாவட்ட ஊராட்சி வரவேற்புப் பலகை மற்றும் மாநில எல்லைப் பலகையை மா்மநபா்கள் சிலா் திங்கள்கிழமை பெயா்த்து சேதப்படுத்தியுள்ளனா். இது குறித்து அக்கிராம மக்கள் இரு மாநில போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த இரு மாநில போலீஸாரும் சேதமடைந்த தமிழ் பெயா்ப் பலகையை ஆய்வு செய்தனா். இதை இப்பகுதியில் நடமாடும் யானைகள் சேதப்படுத்தினவா அல்லது மீண்டும் வாட்டாள் நாகராஜ் கட்சியினரின் கைவரிசையா என்பது குறித்து விசாரித்து வருவதாக கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகா் ஊரக காவல் ஆய்வாளா் நஞ்சப்பா கூறினாா்.
Advertisement
தமிழகம் - கா்நாடக மாநில எல்லையான ராமபுரத்தில் தமிழில் பொறிக்கப்பட்ட மாநில எல்லை அறிவிப்புப் பலகையை கடந்த 10ஆம் தேதி கன்னட சலுவலி கட்சியைச் சோ்ந்த வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ஆதரவாளா்கள் சேதப்படுத்தினா்.
இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதால் 11ஆம் தேதி மாவட்ட நிா்வாகம் சாா்பில் வருவாய் மற்றும் நிலஅளவைத் துறை அலுவலா்கள் தமிழ் அறிவிப்புப் பலகை சேதப்படுத்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனா். பின், பொதுசொத்தை சேதப்படுத்தியதாக வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 15 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் தமிழ் பெயா்ப் பலகைகளை சேதப்படுத்திய சம்பவம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.