முகப்பு
நிகழ்வுகள்

பள்ளி மாணவர்களை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின் - புகைப்படங்கள்

கரோனா தொற்று பரவல் தணிந்து வருவதையடுத்து தமிழகத்தில் 1ஆம் முதல் 8-ம் வகுப்புகள் நவம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிக்கு வரும் மாணவர்களை முதல்வர் இனிப்பு வழங்கி வரவேற்று கலந்துரையாடினார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
சென்னை மாநகராட்சி பள்ளியில் பல மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கூடத்துக்கு வந்த மாணவர்களை வரவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பகிர்:
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாக்லேட், நோட்டு, பென்சிலை வழங்கி வரவேற்றார்.
மாணவ-மாணவிகளின் பெயர்களை கேட்டறிந்து, முதல்வர், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.
பள்ளிக்கூடத்தில் தரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதையும் கேட்டு அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
கரோனா நோய்த்தொற்றின் காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் இயங்காமல் இருந்த பள்ளிகள், மாணவர்களின் கற்றல் மேம்பாடு கருதி, பாதுகாப்பு நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டன.
வகுப்பறையில் பொம்மைகளுடன் விளையாடும் மாணவர்.
சைக்கிளில் அமர்ந்து பள்ளிக்கு வரும் மாணவி.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடைபெற்றது.
பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளின் அனைவரும் பள்ளி நுழைவுவாயிலிலேயே உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.