வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
பகிர்:
இராப்பத்து திருவிழாவின் முதல்நாளான இன்று அதிகாலை பல்வேறு திரு ஆபரணங்கள் அணிந்து வந்து பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாகக் கடந்து வந்த நம்பெருமாள்.பூலோக வைகுண்டம் எனப் பக்தர்களால் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது.
Advertisement
பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த நம்பெருமாள்.விழாவின் ஒவ்வொரு நாளும், நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.முக்கிய நிகழ்ச்சியாக இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
திரளான பொதுமக்கள் கலந்துக்கொண்டு வழிபாடு சாமி தரிசனம் செய்தனர்.லட்சக்கணக்கான பக்தர்கள் ரெங்கா ரெங்கா எனப் கோஷமிட்டவாறு பரமபத வாசலைக் கடந்து சென்றனர்.சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளை நீண்ட வரிசையில் நின்று பக்திப் பரவசத்துடன் சேவித்தனர்.
இன்று (02-01-2023) முதல் இராப்பத்து உற்சவம் தொடங்கி வருகிற ஜனவரி 12 ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா இனிதே நிறைவடைகிறது.திருப்பதி ஏழுமலையான் கோயில்களில் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'கோவிந்தா', 'கோவிந்தா' என பக்தி கோஷங்களை எழுப்பி நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.மார்கழி மாதத்தில் மொத்தம் 20 நாட்கள் விழாவாக கொண்டாடப்படும்.வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய 10 நாட்கள் பகல் பத்து என்றும், பிந்தைய 10 நாட்களை இராப்பத்து என்று கொண்டாடி மகிழ்கிறோம்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டனர்.திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சொர்க்கவாசலில் நுழைந்து நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.