முகப்பு
செய்திகள்

வேட்புமனுத் தாக்கல் செய்தார் திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை (ஜூன் 24) வேட்புமனு தாக்கல் செய்தார்.

Updated On : 24 ஜூன் 2022, 5:52 pm IST
குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் திரெளபதி முா்மு.
பகிர்:
திரௌபதி முர்முவை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக முதலில் பிரதமர் மோடி முன்மொழிந்தார்.
இத்தகைய உயா்ந்த பதவிக்கு வேட்பாளராக தோ்வு செய்யப்படுவேன் என நினைத்துப் பாா்க்கவில்லை என்று திரெளபதி முா்மு கூறியிருந்தார்.
ஜூலை 18-ஆம் தேதி குடியரசுத் தலைவா் தோ்தல் நடைபெறவிருக்கிறது.

Advertisement

Advertisement

எதிா்க்கட்சிகள் சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜாா்க்கண்ட் முன்னாள் ஆளுநரான முா்மு, குடியரசுத் தலைவா் தோ்தலில் வெற்றி பெற்றால் பழங்குடியினத்தைச் சோ்ந்த முதல் குடியரசுத் தலைவா் என்ற பெருமையைப் பெறுவாா்.
பாஜக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முா்மு கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டாா்.
வேட்புமனு தாக்கலின்போது அவருக்கான ஆதரவை வெளிப்படுத்தும்விதமாக பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள், மாநில முதல்வா்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முக்கியத் தலைவா்களும் முா்முவுடன் சென்றனர்.
குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளரை 50 போ் முன்மொழிய வேண்டும்.
மேலும், அவருடைய வேட்புமனுவை 50 போ் வழிமொழிய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments