குதிகால் வலியா?
கிரேக்க புராணத்தில் பிரபல கதாபாத்திரங்களில் முக்கிய வீரன் ஒருவனின் பெயர் ‘அக்கிலீஸ்’.
கிரேக்க புராணத்தில் பிரபல கதாபாத்திரங்களில் முக்கிய வீரன் ஒருவனின் பெயர் ‘அக்கிலீஸ்’. தன் மகனுக்கு எவராலும் சாவு வரக் கூடாது என்று அவனது தாய் பேராசையுடன் கடவுளிடம் வரம் கேட்டாள். ‘ஸ்டிக்ஸ்’ என்ற மந்திர நதியில் உன் குழந்தையை மூழ்கி எடுத்தால் யாராலும் அவனைக் கொல்ல முடியாது’ என்று கடவுள் வரம் அளிக்க அவ்வாறே செய்தாள்.
அக்கிலீஸ் யாராலும் தோற்கடிக்க முடியாத வீர தீரம் மிக்கவனாகத் திகழ்ந்தான். ஆனாலும் ஒரு தவறு நடந்துவிட்டது. அக்கிலீஸை நீரில் மூழ்கச் செய்த போது அவனது தாய் அவனது இரு கால்களையும் பிடித்துத் தலைகீழாகத் தொங்க விட்டு மூழ்கச் செய்தாள். கால்களைப் பிடித்திருந்த கணுக்கால் பகுதியில் மட்டும் மந்திர நதியின் நீர் படவேயில்லை. இதையறிந்த அவனது எதிரிகள் கடைசியாக அவனது கணுக்கால் பகுதியைக் குறி வைத்துத் தாக்கிக் கொன்றனர். இந்தக் கதையிலிருந்து தான் குதிகால் பகுதி எலும்புக்கு ‘அக்கிலீஸ் எலும்பு’ என்றும், குதிகாலுக்கு மேலேயுள்ள ‘குதி தசை நாணுக்கு’ ‘அக்கிலீஸ் தசை நாண் [ACHILLES TENDON]’ என்றும் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
கெண்டைச் சதையையும் குதி எலும்பையும் [CALCANEUM] இணைக்கும் அக்கிலீஸ் தசை நாண் அடிக்கடி பாதிக்கக் கூடிய பலவீனமான பகுதி. இப்பகுதியில் அடிக்கடி வீக்கம், வலி ஏற்படலாம். கால்களுக்கு அதிகமான உழைப்பு, குறிப்பாக கரடு முரடான பாதையில் நடப்பது, அதிகக் குளிரில் அல்லது தண்ணீரில் நடப்பது, அதிக எடையைத் தூக்குதல், பழக்கமின்றி அதிகளவு உடற்பயிற்சி, வாதத்தை அதிகரிக்கும் உணவுகள், சிலருக்கு அதிக உடல் எடை போன்ற காரணங்களாலும் குதி வலி மற்றும் குதிதசை நாண் வலி ஏற்படக் கூடும்.
ஹைஹீல்ஸ் செருப்பு அணியும் 50 சதவிகிதப் பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுவதுண்டு.
இவ்வலியால் நடக்கச் சிரமமாய் இருக்கும் குறிப்பாக சிலருக்கு காலை நேரம் படுக்கையிலிருந்து தூங்கி எழும் போது பாதத்தை தரையில் ஊன்ற முடியாத அளவு மிகக் கடுமையாக வலி காணப்படும். அருகிலுள்ள சுவரை பிடித்தபடி தடுமாறி நடக்கும் நிலை ஏற்படும். வெயில் நேரம் வந்த பின், தொடந்து நடந்து கொண்டே இருந்த பின் வலி சற்று குறையும். சிலருக்கு இரவிலும் ஓய்விலும் கூட வலி இருக்கும். இந்த வலி சில நாட்கள் முதல் சில மாதங்கள் வரை நீடிக்கும். சிலருக்கு குதிங்கால் வீக்கமடையும்; சிலருக்கு குதிகாலின் பின்பக்கம் சிவந்து வீங்கியிருக்கும்.சிலருக்கு கருமையடையும். சிலருக்கு அதிக வலி காரணமாக சுரம் ஏற்படக்கூடும்.
கால் பாதங்களில் வெந்நீரையும் தண்ணீரையும் மாற்றி மாற்றி ஊற்றிக் கழுவித் துடைத்து விட்டால் அல்லது ஒரு பெரிய பாத்திரத்தில் பாதங்கள் மூழ்கும் அளவுக்கு, சூடு தாங்கும் அளவிலான வெந்நீரை ஊற்றி அதனுள் பத்து நிமிடங்கள் காலை மாலை இரு வேளையும் பாதங்களை வைத்திருந்தால் அல்லது தவிடு, உப்பு ஒத்தடம் கொடுத்தால் குதிகால் வலிக்கு தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.
குதிகால் மற்றும் குதிதசை நாண் வலிகளுக்கு ஹோமியோபதியில் உரிய மருந்துகள் மூலம் சிகிச்சை பெற்று பரிபூரண நலம் பெறலாம். கீழ்காணும் பட்டியலிலுள்ள ஹோமியோ மருந்துகள் குதிகால் வலிக்கு உடனடியான நிவாரணம் தருவதோடு முழு நலமும் அளிக்கின்றன.
*அரேனியா டயடேமா [ARENIYA DIADEMA] - குதி எலும்பில் வலி [OS CALCIS]
*பெர்பெரிஸ் வல்காரிஸ் [BERBERIS VULGARIS] 200C - புண்போன்ற வலி,உடல் எடையைக் குதிகால்களில் தாங்கி நின்றால் குறையும்.
*லாதிரஸ் சடைவா [LATHIRUS SATIVA] - கடுமையான வலி காரணமாக குதிகாலை தரையில் ஊன்றாமல், பாத முன் பாகத்தை ஊன்றி நடத்தல்.
*பைட்டோலக்கா [PHYTOLACCA] - குதிகளில் கடுமையான வலி மற்றும் கணுக்கால், பாதம், கால் விரல்களில் வலி, பாதத்தை உயர்த்திக் கொண்டால் வலி குறையும்.
*வலேரியனா [VALERIANA] - நடந்தால் வலி குறையும்; உட்கார்ந்திருந்தால் வலி அதிகரிக்கும் .
*கல்கேரியா காஸ்டிகம் [CALCAREA CAUSTICUM] - இடது குதிகாலில் கிழிக்கும் வலி.
* காலிகார்ப் [KALI CARB] - வலது குதிகாலில் வலி.
*சிலிகா [SILICA] - கணுக்காலில் சுளுக்கிய வலியுடன் குதிகாலில் கிழிக்கும் வலி.
*கோல்சிகம் [COLCHICUM] - குதிகால் வாதவலி - குதிகாலைத் தொடவோ அசைக்கவோ முடியாது.
*லைக்கோபோடியம் [LYCOPODIUM] - குதிகால் வெடிப்புகளுடன் வலி.
*பல்சடில்லா[PULSATILLA ] & ஜிங்கம் மெட் [ZINCUM MET] - குதிகாலில் குடைச்சல் வலி.
*பேசியோலஸ் [ PHASEOLUS] - நீரிழிவுடன் குதிகால் வலி.
*அனகார்டியம் [ ANACARDIUM ] - குதிகால் முதல் கெண்டைக் கால் வரை வலி.
* கால்மியா [KALMIA] & காலி ஐயோடு [KALI IOD] - இடுப்பிலிருந்து குதிகால் வரை வலி பரவுதல்.
*பாஸ்பரஸ் [PHOSPHORUS] - குதிகாலில் ஆணிகள்.
Dr.S.வெங்கடாசலம்
மாற்றுமருத்துவ நிபுணர்
சாத்தூர் Cell : 94431 45700
Mail : alltmed@gmail.com