இன்றைய மருத்துவ சிந்தனை: முதியார் கூந்தல்
இடுப்பு வாதம் , மூட்டு வலி போன்றவை குணமாகும்
உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
முதியார் கூந்தல்:
- முதியார் கூந்தல் , நன்னாரி , கடுக்காய் இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் வீக்கம், கால் வீக்கம் போன்றவை குணமாகும்.
- முதியார் கூந்தலை அரைத்து இளநீரில் கலந்து குடித்து வந்தால் கடுமையான காய்ச்சல் உடனே குணமாகும்.
- முதியார் கூந்தலுடன் இஞ்சி (ஒரு துண்டு) சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வாதம் , மூட்டு வலி போன்றவை குணமாகும்.
- முதியார் கூந்தல் இலையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் மூலக் கடுப்பு , நாவறட்சி குணமாகும்.
- முதியார் கூந்தல் , கோதுமை மாவு இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து கட்டிகள் மீது தடவி வந்தால் அவை விரைவில் உடைந்து ஆறும்.
முதியார் கூந்தல் (Xenostegia tridentata, முதியார் கூந்தல்) என்பது அம்பு முனை போன்ற இலையினைக் கொண்ட இத்தாவரம் 2 மீ வரை வளரக்கூடியது. மணல் தரையில் வளரும் இதன் இலை 5-10 செ.மீ நீளமும், 1 செ.மீ அகலமும் உடையது. இதன் பூக்கள் மஞ்சள் நிறமுடையன. இதனைக் கடற்கரை, பயிரிடும் பகுதிகள், தரிசு நிலங்கள், வீதியோரங்கள், காடுகளின் ஆரம்ப இடங்களில் காணலாம்.
Advertisement
Advertisement
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com