தீராத மலச்சிக்கலைப் போக்க உதவும் அருமருந்து
தீராத மலச்சிக்கலைப் போக்க இந்த சூரணத்தைப் பயன்படுத்திப் பலன்பெறுங்கள்.
தீராத மலச்சிக்கலைப் போக்க இந்த சூரணத்தைப் பயன்படுத்திப் பலன்பெறுங்கள்.
தேவையான பொருள்கள்
லவங்கப்பத்திரி. - 100 கிராம்
Advertisement
Advertisement
நிலாவரை. - 100 கிராம்
வாய்விளங்கம். - 100 கிராம்
செய்முறை
முதலில் லவங்கப்பத்திரி , நிலாவரை மற்றும் வாய்விளங்கம் மூன்றையும் மேற்கூறிய அளவு எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். சுத்தப்படுத்திய பின்பு அனைத்தையும் தனித்தனியாக அரைத்துப் பொடி செய்து பின்பு ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
பயன்கள்
இந்த சூரணம் தீராத மலச்சிக்கலைப் போக்க உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய குறைபாட்டினால் துன்பப்படுபவர்கள் மேற்கூறிய சூரணத்தைத் தயார் செய்து வைத்துக்கொண்டு தினமும் இரவில் மட்டும் சாப்பிட்ட பின்பு ஐந்து கிராம் அளவு எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வரவும்.
நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை எடுத்துக் கொள்ளலாம்.
இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.
- கோவை பாலா
இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்
Cell : 96557 58609 , 75503 24609
Covaibala15@gmail.com
Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.