முகப்பு
இந்தியா

பி.ஜே.குரியனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி எம்.பி.க்கள் வெளிநடப்பு

மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரிக் கட்சிகள் வெளிநடப்பு

Updated On : 2 மார்ச் 2013, 1:18 am IST
பகிர்:

மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

சூரியநெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் இருந்து பி.ஜே.குரியன் நிரபராதி என்று விடுவிக்கப்படும் வரை அவரை மாநிலங்களவையில் புறக்கணிக்கப் போவதாக இடதுசாரிக் கட்சிகள் ஏற்கெனவே கூறியிருந்தன. அவரை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியிலும் எதிர்க்கப் போவதாக அறிவித்திருந்தன. குரியனைக் கண்டித்து கேரள மாநிலத்தில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

இந்நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லியின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே வியாழக்கிழமை விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து, பண்டாரா பாலியல் பலாத்காரம் தொடர்பாக விவாதம் தொடங்கியது. அப்போது, சூரியநெல்லி சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குரியன் அவையைத் தலைமை தாங்கி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.