முகப்பு
இந்தியா

பாஜக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதம்

ஆந்திரத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மாநிலத் தலைவர் கிஷன் ரெட்டி தலைமையில் தொடர்ந்து 3ஆவது

Updated On : 2 ஏப்ரல், 2013 at 2:50 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:07 PM

ஆந்திரத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மாநிலத் தலைவர் கிஷன் ரெட்டி தலைமையில் தொடர்ந்து 3ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

மின்கட்டண உயர்வைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள், தெலுங்கு தேசம் என எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சுழற்சி அடிப்படையில் பழைய எம்எல்ஏ விடுதியில் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். அவர்களது உண்ணாவிரதம் முடிந்த பின் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஏ.லட்சுமிநாராயணா உள்ளிட்டோர் உண்ணாவிரதம் தொடங்கினர். இந்த உண்ணாவிதம் தொடர்ந்து 3ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடர்ந்தது.

மாநிலத் தலைவர் கிஷன் ரெட்டி மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த மற்ற எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர். 3ஆவது நாளன்று முன்னாள் மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, வித்யாசாகர், ஆந்திர பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணய்யா, ஜெயப்பிரகாஷ் நாராயணா எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.