பெங்களூரில் பாதிரியார் அடித்துக் கொலை
பெங்களூரில் கிறிஸ்தவ குரு மடத்தில் பாதிரியார் ஞாயிற்றுக்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
பெங்களூரில் கிறிஸ்தவ குரு மடத்தில் பாதிரியார் ஞாயிற்றுக்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
பெங்களூர் யஸ்வந்தபுரம் பழைய மைசூர் லேம்ப் சாலையில் புனித செயின்ட் பீட்டர்ஸ் கத்தோலிக்க கிறிஸ்தவ குருமடம் உள்ளது. இங்கு பாதிரியார்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இதன் முதல்வராக இருந்தவர் உதகமண்டலத்தைச் சேர்ந்த பாதிரியார் தாமஸ் (60). குருமடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கியிருந்த அவரை மர்ம நபர்கள் ஆயுதங்களால் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
Advertisement
தகவல் அறிந்த யஸ்வந்தபுரம் போலீஸார் தாமஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
பெங்களூர் மாநகரக் காவல் துறை ஆணையர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி, துணை ஆணையர் சித்தராமையா, பெங்களூர் கத்தோலிக்க மறை மாவட்டப் பேராயர் பெர்னார்ட் மோரஸ் ஆகியோர் பார்வையிட்டனர்.