மொபைல் கோபுரத்தில் ஏறி எம்எல்ஏ ஆர்ப்பாட்டம்
ராஜஸ்தானில் மூன்று மொபைல் போன் கோபுரங்களை இடம் மாற்ற வலியுறுத்தி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. மொபைல்
ராஜஸ்தானில் மூன்று மொபைல் போன் கோபுரங்களை இடம் மாற்ற வலியுறுத்தி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. மொபைல் கோபுரத்தின் மீது ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
ராஜஸ்தான் மாநிலம் படி சத்ரி தொகுதி எம்.எல்.ஏ.வாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரகாஷ் சந்திர சௌதரி இருக்கிறார். இவர் தனது தொகுதியில் மக்கள் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மூன்று மொபைல் போன் கோபுரங்களையும் ஆளில்லாத பகுதிக்கு இடம் மாற்றுமாறு வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை அவற்றில் ஒரு கோபுரத்தின் மீது மளமளவென்று ஏறி தனது கோரிக்கையை வலியுறுத்தினார்.
Advertisement
அங்கு விரைந்த போலீஸôரும், மாவட்ட அதிகாரிகளும் அவரிடம் சமரசம் பேசி கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து எம்.எல்.ஏ. மொபைல் கோபுரத்திலிருந்து கீழே இறங்கினார்.